பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தல் வளர்முக நாடுகளில் இளம் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் என்னும் தலைப்பிலும், மற்றும் இளம் தொழிலாளர்களின் பொதுப் பிரச்னைகள் பற்றியும் உலக தொழிற் சங்க சம்மேளனத்தின் சார்பில் பல்கேரிய நாட்டில் வார்னா நகரில் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர் மாநாட்டில் இந்திய தொழிலாளர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் இந்திய நாட்டின் இளம் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றிய அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை உலகத் தொழிலாளர் சம்மேளனத்தின் ஆவணங்களின் பகுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. 1980 ஆம் ஆண்டுகளில் உலக தொழிற் சங்க சம்மேளனமும், சமாதானம் மற்றும் சோஷலிஸம் பற்றிய பிரச்னைகளும் என்னும் சர்வதேச இதழும் சேர்ந்து நடத்திய கருத்தரங்கில் வளர்முக நாடுகளில் “பொதுத் துறையின் பங்கும் பொதுத் துறைக்கும் தனியார் துறைக்கும் இடையிலான உறவு தொடர்புகள் பற்றிய பிரச்னைகள் பற்றி டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு. அ.சீனிவாசன் இந்தியாவில் பொதுத் துறைக்கும் தனியார் துறையில் உள்ள நடுத்தர மற்றும் சிறு தொழில்களுக்கும் இடையிலான உறவு என்னும் தலைப்பில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்து அது உலக தொழிற் சங்க ஆவணத்தில் பதிவாகியுள்ளது. பத்திரிகையாளராக : தொழிற் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் தொழிற் சங்கச் செய்தி, ஹார்பர் தொழிலாளி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியர் பொருப்பில் பணியாற்றியுள்ளார். கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராக இருந்த போது கட்சியின் மாநில அமைப்பு நிலைப் பொருப்பில் இருந்த காலத்தில் கட்சியின் பத்திரிகையான ஜனசக்தி வார இதழ் மற்றும் நாளிதழ்களில் தலைமை ஆசிரியராக எட்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கட்சியின் சித்தாந்த ஏடான மார்க்சீய ஒளி மாத இதழின் தலைமை ஆசிரியராக இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.