பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii மகாபாரதம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், நள வெண்பா, இராமானுஜருடைய தத்து வங்கள் முதலியவை பற்றி அறிமுகமானவர். விடுதலை இயக்கத்தின் ஆதர்சத்தில் பள்ளிப் படிப்பு காலத்தில், மகாகவி பாரதியார், வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, விவேகானந்தர் நூல்கள், அவர்களைப் பற்றிய செய்திகள், ஆனந்த மடம் முதலிய பக்கிம் சந்திரர் மற்றும் சரத் சந்திரர் நாவல்கள், கல்கி நாவல்கள், மணிக் கொடி கதைகள் முதலிய இலக்கியங்களிலும் அறிமுகமாகி நாட்டுப் பற்றை வளர்த்துக் கொண்டவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தீவிரவாதக் கருத்துக்களுக்கு ஆதரவான சிந்தனை போக்குகளைக் கொண்டிருந்தார். பாரதி, விவேகானந்தர், ஆகியோரின் இந்திய சிந்தனைப் போக்கு அவரை மிகவும் கவர்ந்தது. அதன் பெருமிதத்தை படிப் படியாக வளர்த்துக் கொண்டிருந்தார். திரு. அ.சீனிவாசன் இந்திய கம்யூனிஸ்ட் தொடர்பு ஏற்பட்ட போது கம்யூனிஸ்ட் இலக்கியங்களையும் குறிப்பாக மார்க்ஸ் ஏங்கல்ஸ், லெனின் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்களின் மூல நூல்களை ஆழ்ந்து படித்தார். அப்போது இயற்கை, சமுதாயம், தனி மனித சிந்தனை பற்றியும் அதன் வழியில் தத்துவ ஞானம், அரசியல் பொருளாதாரம், சமுதாய வரலாறு, பற்றியுமான ஐரோப்பிய சிந்தனைகள், ஐரோப்பாவில் நிகழ்ந்த தீவிரமான கருத்துப் போராட்டங்கள், தொழில் புரட்சி மூலம் நிகழ்ந்த சமுதாய மாற்றங்கள் முதலியவை பற்றிய இலக்கியங்கள் மூலம் ஐரோப்பிய சிந்தனை வளர்ச்சி பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. அத்துடன் சோவியத் யூனியனின் தோற்றமும் வளர்ச்சியும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆவணங்கள், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆவணங்கள், தொடர்ச்சியான அறிக்கைகள் தீர்மானங்கள் ஆகியவற்றையும் ஆழ்ந்து படிக்க நேர்ந்தது. சீனாவின் கம்யூனிஸ்ட் இலக்கியங்களையும் படிக்க நேர்ந்தது. இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் வளர்ச்சிக்கான பாதை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பது