பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix ஆண்டு செப்டம்பர் மாதம் பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைமையின் கீழ் சமுதாய பணி ஆற்றி வருகிறார். ஒரே நாடு பத்திரிக்கை மற்றும் விஜயபாரதம் ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றியும் எழுதியும் வருகிறார். அத்துடன் சொந்தமாகவும் பாரதி, கம்பன், சிலப்பதிகாரம், திவ்யப் பிரபந்தம் தொடர்பான பல நூல்களும் எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டும் வருகிறார். அதன்படி பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி, பாரதியின் புதிய ஆத்திசூடி - ஒரு விளக்கவுரை, சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துகள் ஆகிய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கு உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றிருக்கிறது. அத்துடன் திரு. அ.சீனிவாசன் எழுதிய சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும் - ஒரு ஆய்வு என்னும் நூலை பிரபல வெளி யீட்டு நிறுவனமான பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கிறது. மேலும் திரு. அ.சீனிவாசன் எழுதி முடித்து அச்சில் உள்ள ஆழ்வார்களும் பாரதியும், பாரதியின் தேசீயம், கம்பன் ஒரு சமுதாயப் பார்வை, கம்ப நாடான் காவியத்தில் காதலும் பெருங்காதலும், கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும் என்னும் நூல்கள் விரைவில் வெளி வரவுள்ளன. மேலும் பாரதி, கம்பன் தொடர்பாக வேறு சில நூல்களும் கிராமங்களை நோக்கி, இந்தியப் பொருளாதார சிந்தனைகள், பாரதியும் பகவத் கீதையும் முதலிய நூல்களும் எழுதிக் கொண்டு வருகிறார். பாரதி தொடர்பாக பல நூல்களை எழுதியும் பாரதி தொடர்பாக பல நூல்களை எழுதியும் பாரதி புகழ் பரப்புவதில் பங்கு கொண்டும் வருவதில் திரு. அ.சீனிவாசன் பாரதிய ஜனதாக் கட்சி வட்டாரத்தில் பாரதி சீனிவாசன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். О О О