பக்கம்:கரிகால் வளவன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

டிலிருந்து தம் நண்பராகிய மருத்துவரை அழைத்து வந்தார். அவர் கட்டுக் கட்டினார். தாயும் வந்து சேர்ந்தாள்.

சில நாட்கள் மருந்து கட்டினார்கள். கடைசியில் கட்டை அவிழ்த்தார்கள். அந்த அழகிய கால் கறுப்பாகக் கரிந்திருந்தது. பகைவருடைய வஞ்சகச் செயலுக்குச் சாட்சியாக அந்தக் கரிந்த கால் இருந்தது. “உயிருக்கு வந்தது காலோடு போயிற்றே!” என்று ஆறுதல் அடைந்தாள் தாய்.

அன்று முதல் திருமா வளவன் கரிகாலன் ஆனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/31&oldid=1232472" இலிருந்து மீள்விக்கப்பட்டது