பக்கம்:கரிகால் வளவன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

வாயிலை அமைக்கச் செய்தான். யார் வந்தாலும் நகரத்தில் நுழையும்போதே அதன் அழகு அவர் கண்ணைக் கவர்ந்தது. சோழ மன்னனுடைய புகழ் வட நாடெல்லாம் பரவியிருப்பதை அந்தத் தோரண வாயில் ஓங்கி உயர்ந்து நின்று அறிவித்துக்கொண்டிருந்தது.

ஒருவாறு தன்னுடைய வீரத்தால் பகையை ஒடுக்கி நான்கு திசையிலும் புகழ் பரப்பிய கரிகாலன் சிங்காதனத்தில் அமர்ந்து தன் நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபடலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/57&oldid=1205683" இலிருந்து மீள்விக்கப்பட்டது