பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியை திருமதி. ராஜம் கிருஷ்ணன்

1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது ஊசியும் உணர்வும்: என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.

1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது பெண்குரல் நாவல்.

1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது ‘மலர்கள் நாவல் முதல் பரிசைப் பெற்றது.

1973-ம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதை ‘வேருக்கு நீர் நாவலுக்காக இவர் பெற்றார்.

1975-ல் சோவியத்லாந்து நேரு பரிசை கோவா விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் இவரது வளைக்கரம் நாவல் பெற்றது. i.

1980-ல் இலக்கியச் சிந்தனையின் பரிசை இவரது ‘கரிப்புமணிகள் நாவல் பெற்றது.

1982-ல் இலக்கியச் சிந்தனைப் பரிசையும் பாரதீய பாஷா பரிஷத் பரிசையும் பெற்றது இவரது சேற்றில் மனிதர்கள் நாவல். 1987-க்கான தமிழக அரசின் பரிசை தமது சுழலில் மிதக்கும் தீபங்கள் நாவலுக்காகப் பெற்றார்.

1991-ல் தமிழக அரசின் திரு.வி.க. விருதைப் பெற்றார். இவர். 1994-ல் சாஸ்வதி பரிசை இவரது அவள் சிறுகதைத் தொகுப்பு பெற்றது.

1995-ல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க விருதைப் பெற்றார்.

1996-க்கான “அக்னி"யின் அட்ஷர விருதைப் பெற்றார்.

திருச்சி மாவட்டத்தில் 5.11.1925-ல் பிறந்த இவர், ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுகிறார்: இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.