பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

சாத்திரங்கள் பல தந்தார்-இந்தத்
      தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன். (4)

கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
     காதில் விழுந்த திசை மொழி எல்லாம்
என்னென்ன வோ பெயர் உண்டு-பின்னர்
     யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர் (6)

தந்தை அருள்வலி யாலும்-முன்பு
     சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கண மட்டும் காலன்-என்னை
      ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் (7)

இந்தப் பகுதியால், தமிழின் தோற்றம், வளர்ச்சி அழிவின்மை ஆகியவை சுருங்க அறிவிக்கப்பட்டுள்ளன. பல மொழிகள் அழியவும், தமிழ் அழியவில்லை என்னும் கருத்துக்கு, “என்றும் உள. தென் தமிழ்” என்னும் கம்ப ராமாயண ஆட்சியும், "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே”, என்னும் மனோன்மணிய வாழ்த்துப்குதியும் இன்ன பிறவும் அரண் செய்யும்.

3-2. தமிழ் இலக்கிய வரலாறு:

அடுத்து, தமிழ் இலக்கியங்கள் பற்றிப் பாரதியார் கோடிட்டுக் காட்டியுள்ள சுருக்கமான சில குறிப்புகள் வருமாறு:

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
        வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்த தில்லை
         உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை" (தமிழ்-2)