பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137


புரட்சி ஆகியனவாம். இக்கொடுமைகள் நீங்கின் மக்களினம் உய்யும்.

"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பர். "முதல் பதிவே முதன்மையான பதிவு" (First impression is the best impression). எனவே கிழங் கட்டைகட்குச் சொல்லிப் பயனில்லை: குழந்தைப் பருவத்திலேயே சாதி வேற்றுமை உணர்வைத் தகர்க்க வேண்டும் என்று கருதிப் பாப்பாவை நோக்கி.

“சாதிகள் இல்லையடி பாப்பா-- குலத்
தாழ்ச்சி உயர்வு சொல்லல்- பாவம்’

என்று உணர்த்தியுள்ளார்.

"தெய்வம் பலபல சொல்லிப்-பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்.”

“பாருக் குள்ளே தெய்வம் ஒன்று-- இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்”.

என்று மதவேற்றுமையைச் சாடியுள்ளார்.

"பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்.-- பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்."

"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்-- இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்"

"முப்பது கோடி சனங்களின் சங்கம்,
முழுமைக்கும் பொது உடைமை"

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும்,
வழக்கம் இனி யுண்டோ"

"தனி யொருவனுக் குணவிலை யெனில்
சகத்தினை அழித்திடுவோம்."