பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

கலைகளின் தாய்ப் பகுதி

18. தமிழில் ஒப்புமைக் கலை

(1. ஒப்புமைக்கலை; 2. தமிழில் ஒப்புமைக்கலை; 3. தொல்காப்பியத்தில் ஒப்புமைக்கலை; 4. பிற்கால நூல் களில் ஒப்புமைக்கலை;5.ஒப்புமைக் கலையின் எதிர்காலம்)

1. ஒப்புமைக் கலை

ஒப்புமை இலக்கணம்

(1) ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’-(1)

என ஒப்புமை விளக்கத்துடன் திருவள்ளுவர் திருக்குறளைத் தொடங்கியுள்ளார். எல்லா எழுத்துகளும் ‘அ’ என்னும் எழுத்தை முதலாக உடையன; அதுபோல உலகம் இறை வனை முதலாக உடையது'-என்பது குறள் கருத்து. நன்கு தெரியாத ஒன்றை விளக்குவதற்கு இது போன்றது. அது’ என நன்கு தெரிந்த ஒன்றை மாதிரியாக எடுத்துக்காட்டு வதுதான் ஒப்புமை எனப்படுவது. இதனை உவமம், உவமை என்றும் கூறுவர். ‘அகர முதல எழுத்தெல்லாம் என்பது உவமம். அதன் வாயிலாக விளக்கப்படும் பொருள் ஆதி பகவன் முதற்றே உலகு என்பது.

ஒப்புமை ஒரு கலை:

(2) பேச்சிலோ எழுத்திலோ பொருள் விளக்கத்திற்குப் பொருத்தமான ஒர் உவமம் எடுத்துக்காட்டும் திறமையில் ஒப்புமைக் கலை பிறக்கிறது. ஒருவர் தாம் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்குக் கையாளும் ஒப்புமை யின் நுட்பச்சிறப்பைக் கொண்டு உயர்ந்த எழுத்தாளராக