பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

நாற்பது வயதைக்கடந்தவர் என்றாலும்; அவரை இன்னும் குறைந்த வயதுக்கு மதிப்பிட வேண்டும். காட்சிக்கு இனியவ ராகிய அவரை விட்டு மைனர்’ விளையாட்டு இன்னும் நீங்கவில்லை. பெண்ணின்பம் அவருக்கு ஒரு பெரும் பொழுது போக்கு.

கலாவுடனும் மற்ற பரிவாரங்களுடனும் சித்ராதேவி சென்னையிலே சில ஆண்டுகளாக முகாம் இட்டுள்ளாள் கலா மலரத் தொடங்கியதும் வண்டுகளும் சுற்றி வட்டமிடத் தொடங்கின. ஆனால், சித்ராதேவியோ, கலாவின் முழு மலர்ச்சிக்கு அரங்கேற்றம் செய்யப் பெரிய பொன் வண்டை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்-அது இப்பொழுது கிடைத்து விட்டது. அந்தப் பொன் வண்டுதான் சேதுநாதன்.

கட்டிளங்கன்னி கலாவை முதல் முதல் சுவைக்க விரும்புபவர்கள் ஐயாயிரம் உரூபா அளிக்க வேண்டும் என்பது பாட்டியின் ஏற்பாடு. ஐயாயிரம் என்ன-பதினையாயிரம் வேண்டுமானாலும் தரத் தயார் சேதுநாதன். தீராத விளையாட்டுப் பிள்ளையாகிய அவருக்கு, இந்தத் தொகை, மற்றவரது காஃபி செலவைப் போன்றதே! இதற்கென்றே உள்ள மாமா மூலம் கலாவின் கட்டில் அறைக்குள் நுழைந்து விட்டார் அவர். பணம் பத்தும் செய்யும்-பணம் பாதாளம் வரைக்கும் பாயும்-என்பார்களே!

சேதுநாதன் இதுவரை தமது வாழ்நாளில் காமக் காட்டிற்குள் புகுந்து எத்தனையோ மான்மறிகளை வேட்டையாடிய துண்டு. இந்தத் துறையில் அவர் மிக்க வல்லுநர் எந்த மானாவது மருண்டாலும் வெருண்டாலும் எப்படியாவது அந்த மானை வளைத்து வலைக்குள் அகப்-