பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191

படுத்திக்கொள்வார். அதற்குரிய நயப்பு எல்லாம் அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு. ஆனால் கலாவிடம் .........?

கலாவின் ஆரஞ்சு மேனி அழகை அள்ளி அள்ளிப் பருக வேண்டும் என்னும் ஆர்வத்தில் சேதுநாதன் மெய்ம்மறந்து காணப்பட்டார். எத்தனையோ இளைஞர்களை எண்ணி யெண்ணி ஏங்கிப் பெருமூச்சு விடச் செய்து வந்த கலாவின் காந்தள் கைகளைத் தீண்ட அவர் கைகள் விரைந்தன. ஆமைபோல் அவள் தன் கைகளை இழுத்துக்கொண்டாள். ‘வெட்கப்படுகிறாயா?’ என்று கேட்டுக்கொண்டே நெருங்கினார். அவள் நின்றால்தானே! கலா அவருக்குக் கானல்நீர் ஆனாள். அருகில் தெரியும் கானல்நீர், நெருங்க் நெருங்க நகர்ந்துகொண்டே யிருப்பதைப் போல, அவள் நகர்ந்து நகர்ந்து அவரைக் கண்ணாம்பூச்சி சுற்றவைத்துக்கொண்டிருந்தாள்.

இந்தத் துறையில் தமது முதல் தோல்வியை ஒத்துக் கொண்டவர் போல வலிந்து வரவழைத்துக் கொண்ட அசடு வழியும் பொய்யான புன்சிரிப்புடன் சேதுநாதன் அங்கிருந்த ஒரு பஞ்சணையில் அமர்ந்தார். கலாவின் மருட்சிக்குக் காரணம் என்னவாயிருக்கலாம் என்று சிறிது சிந்தித்தார். வெட்கமா? அல்லது விளையாட்டுக்கா? இருக்க முடியாது. வேதனைதான் காரணம் என்பதை அவள் முகத்திலிருந்து வடித்தெடுத்துக் கொண்டார். எப்போதுமே பெண்களிடம் அவர் நளினமாக நடந்து, கொள்வாரே தவிர முரட்டுத்தனம் செய்வதில்லை-வெட்கப்படுகிறாயா கலா? என்று மற்றொரு முறை அமைதியாகக் கேட்டார். 'இல்லை, வேதனைப்படுகிறேன்’ என்ற பதில் கலக்கத்துடன் வந்து, அவர் காதுகளுக்குள் நாராசம் காய்ச்சி விட்டது போல் புகுந்தது.

‘ஏன், நான் சற்று வயதானவன் என்பதினாலா?',