192
“இல்லை”
"அல்லது நான் உன்னுடன் ஒரு நாளைக்கு உறவாடி விட்டு, பிறகு கைவிட்டுவிடுவேன் என்ற காரணமோ?”
“அதுவும் இல்லை”
“பின் ஏன்?”
“என்னை எதுவும் கேட்டுத் தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் பாட்டியிடம் கொடுத்த ஐயாயிரம் ரூபாய்க்கு ஈடாக என் வைர நெக்லெசைத் தருகிறேன்? எடுத்துக் கொண்டு போய் விடுங்கள்”.
"எனக்குப் பணம் தேவையில்லை; நீதான் தேவை. அதற்காக இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயார்.”
"நீங்கள் பணத்தாலேயே என்னை முழுக்காட்டினாலும் நான் உங்களுக்குக் கிடைக்க மாட்டேன்.”
“ஏன்? கை நிரம்பக் காசை அள்ளி அள்ளிக் கொடுப்பவர்க்குத் திருப்தியளிப்பதுதானே உங்கள் குலத் தொழில்?”
“கை நிரம்ப என்ன? கூரையையே பிரித்துக் கொட்டினாலும் நான் எவர்க்கும் இசைய மாட்டேன்"
அப்படியென்றால் எனக்கு இவ்வளவு சிரமம் கொடுத்திருக்க வேண்டியதில்லையே. இதை நீ முன் கூட்டியே உன் பாட்டி தேவியிடம் தெரிவித்திருக்கலாமே?”
"தெரிவிக்க இனி ஒன்று மில்லை".
“ஓ! தெரிவித்தும் அவள் உன்னை வற்புறுத்தினாளா?"