195
“ஒரு நல்ல இளைஞரைத் தேடி என்னை மணஞ்செய்து கொடுக்கவேண்டும்”.
"ஏன், என்னை மணப்பதால் உனக்கு என்ன குறை?”
“உங்கள் வயதைப் பார்த்தால், நீங்கள் இதற்கு முன்பே மணஞ் செய்துகொண்டிருக்க வேண்டுமே”.
"உண்மைதான்; ஆனால் எனக்குக் குழந்தை இல்லை. அதனால்தான் உன்னை மணக்க விரும்புகிறேன்".
"அப்படியானால் மிகவும் நல்லதாயிற்று".
"ஒத்துக் கொள்கிறாயா கலா?"
"இல்லை. உங்களுக்குக் குழந்தை இல்லாததனால், என்னை உங்கள் குழந்தையாக ஏற்றுக் கொள்ளலாமே, என்கிறேன்”.
“அது நடக்குமா? மனைவியாக ஆசைப்பட்டவளை மகளாக ஏற்றுக் கொள்ள முடியுமா?"
“அப்படியென்றால், என் தாயைப் போல எனக்குத் தற்கொலையைத் தவிர வேறு வழி யில்லையா?”
"என்ன! உன் தாய் தற்கொலை செய்து கொண்டாளா? ஏன்?"
"அது ஒரு பெரிய கதை" என்று சொல்பவள் போல் பெருமூச்சு விடுதல் என்னும் பெயரில் மூக்கிலிருந்து நெருப்பைக் கக்கினாள். கண்கள் முத்துக்களை உதிர்த்தன உடல் முழுதும் வியர்த்து விட்டது. பனியில் நனைந்த பளிங்குச் சிலையானாள் கலா.
“ஏன் கலங்குகிறாய்? ஏதாவது சொன்னால் தானே... ..." என்று உள்ளடங்கிய திரியைத் தூண்டிவிட்டார் சேதுநாதன்.