பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

துறைகளில் பலர் கூடிப் பணியாற்றும் பலவகை நிறுவனங்களும் இன்று பெற்றுள்ளன.

அங்கனமெனில், சங்ககால நூல்களிலும் இடைக்காலபிற்கால இலக்கியங்களிலும், 'கழகம்’ என்னும் சொல், இரு துருவங்கள் போல் மிகவும் மாறுபட்ட இருவேறு பொருள்களில் ஆளப்பட்டிருப்பதிலுள்ள உண்மை யாது? இதனை நாம் கண்டு பிடிக்கக் கழகம் என்னும் சொல் குறித்து ஒரு சிறிது ஆராய வேண்டும்:-

கழக வரலாற்று ஆராய்ச்சி

கழகம் என்னும் சொல்லை எழுத்து எழுத்தாக அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து 'அறுவை மருத்துவம்’ செய்து ஆராய்ச்சி செய்பவரும் உண்டு. இதற்காக இவ்வளவு மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. இது மிகவும் எளிதில் அவிழ்க்கக் கூடிய சிக்கலேயாகும். எட்டாம் நூற்றாண்டில் எழுந்த சேந்தன் திவாகரம்’ என்னும் நிகண்டு நூல் இதற்குத் துணைபுரியும். கழகம் என்னும் சொல்லுக்குத் திவாகர நிகண்டில் கிடைக்கும் பொருள் விளக்கம் வருமாறு:

“செல்லல் தீப்க்கும் பல்புகழ்ச் சேந்தனில்
வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும்
மல்லும், குதும், படையும், மற்றும்
கல்வி பயில் களமும், கழகம் ஆகும்"

சேந்தன் திவாகரம்-இடப்பெயர்த் தொகுதி-160

'சேந்தனைப் போல் கல்வியறிவிற் சிறந்த நாவலர்கள் கூடும் இடமும், மற்போர் பயிலும் இடமும், சூது ஆடும் இடமும், படைப் பயிற்சி பெறும் இடமும், கல்வி கற்கும் இடமும், கழகம் எனப் பெயர் பெறும்' என்பது மேலுள்ள