பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

கம்பளத்தை வாலிபரும் களிக்குங் காலம்
கனல் கலத்தை விருத்தரெலாம்.கைக்கொள் காலம்
தம்பதிதோள் மின்னார்கள் தழுவுங் கால்ம்
தழல்புகைபோல் மூடும் இந்தப் பணித்தண்காலம்
நம்பினருக்கு அருள் முருகர் மயில வெற்பில்
நாயகரை நான் விடுத்து நலியுங் காலம்’

இந்தப் பணிக்காலக் காட்சிப் பாடல் மிக்க சுவையின்பம் ஈந்து, புலவரின் சிறப்பிற்குச் சான்று பகர்கிறது.

மறைவு:

இவ்வாறு தனிப்பெருஞ்சிறப்புடன் புதுவையில் புலமை ஆட்சி நடத்திய பெரியசாமிப் பிள்ளை, 1920 ஆம் ஆண்டு சனவரி 24 ஆம் நாள் இறுதி யெய்தினார். அவரது பிரிவாற்றாது மாணவர் குழாமும் அறிஞர் குழாமும் பாடிய இரங்கற்பாக்கள் கணக்கில. அப்பாக்கள் ஒரு நூல் வடிவில் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றுள், பிள்ளையவர்களின் மாணாக்கராய பாவேந்தர் பாரதிதாசனாரது ஒரு பாடலைக் காணலாம்.

(பதினான்கு சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
பூமியை மறந்துவிட் டீரே எமக்கிங்கோர்
     போக்கிலா தாக்கினிரெம்
புன்மதி விளக்குமதி காரத்தை நீரிங்குப்
     பொற்கதிர்க் கீந்தி ரேனும்
யாமதைப் புதுமையாய்க் கொள்வதுண் டோதினம்
     எங்கள்பாற் காட்டு மன்பை
ஈன்றதாய்க். கீந்துசென் ஹீரெனினு மன்னதால்
     இதயத்துள் அமுத முறுமோ
தாமதமி லாதுகவி பாடிடுந் தன்மையைச்
     சமுத்திரற் கீந்தி ரதுதான்