பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

என்று தெரிவிக்கும் விவரம், அருஞ்சொல் உரை விளக்கம் முதலியனவும் இவரது அடிக்குறிப்பில் காணப்படும்.

தாமோதரனார் பழம்பெரும் புலவர்களின் நூல்களைப் பதிப்பித்து இலக்கிய-இலக்கணம் காத்தவர் என்னும் பெருமைக்கு உரியவரானதன்றி, தாமும் பல நூல்கள் இயற்றித் தமிழை வளப்படுத்தியுள்ளார். இவர் இயற்றிய நூல்களுள் கட்டளைக் கலித்துறை, ஆதி ஆகம கீர்த்தனம், நட்சத்திர மாலை, சூளாமணி வசனம், சைவ மகத்துவம், ஆறாம்ஏழாம் வகுப்புகட்கு உரிய வாசகப் பாடநூல்கள் முதலிய படைப்புகள் சிறப்பாகக் குறிப்பிடற்பாலன. இவரது நூல் நடையில் உவமை, உருவகம் முதலிய அணிகளின் சிறப்புகளைக் கண்டு களிக்கலாம்.

இவர் முழு நூல்கள் பல இயற்றியதன்றி, பல பொருள்கள் பற்றித் தனிப்பாடல்கள் பலவும் பாடியுள்ளார். தமிழ்ப்பேர்றிஞர்களின் மேல் பாடல் பாடுவதில் இவருக்குப் பெரு மகிழ்ச்சி உண்டு. தம் தமிழாசிரியர் சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயர் மேல் இவர் பல பாடல்கள் பாடியுள்ளார். தாம் அச்சில் பதிப்பித்த ஒவ்வொரு நூலின் முன்னுரையிலும் தம் தமிழாசிரியர் மீது நன்றி வணக்கப்பாடல்கள் பாடிச் சேர்த்துள்ளார். கம்பர் தமக்குப் பொருளுதவி புரிந்து ஆதரித்த சடையப்ப வள்ளலைத் தம் இராமாயண நூலிலும், வில்லி புத்துாரார் தம்மை ஆதரித்த வரபதியாட் கொண்டானைத் தம்பாரத நூலிலும் நடு நடுவே பாடி நன்றிக் காணிக்கை செலுத்தியிருப்பதை நாமறிவோம். மற்றும், பல்வேறு புலவர்கள் தம்மைப் பொருளுதவியால் புரந்த புரவலர்கள்-வள்ளல்கள் -குறுநிலமன்னர்கள்-முடியுடைப் பேரரசர்கள் முதலானோரைப் பாடி நன்றிக்கடன் செலுத்தியிருக்கும் வரலாறு நாடறிந்ததே. ஆனால், தமக்குத் தமிழ் கற்பித்த