பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

தமிழாசிரியரைப் பற்றி ஒவ்வொரு நூலிலும் பாடியுள்ள புதுமையாளரை - புரட்சியாளரை நாம் தாமோதரம் பிள்ளையின் வடிவத்தில் முதல் முதலாகக் கண்டு பெரு வியப்பு எய்துகிறோம். ஐரோப்பியக் கல்வி முறை வந்து விட்டமையால், தமிழின மாணாக்கர்களே தமிழாசிரியர்களை எள்ளி நகையாடிப் புறக்கணிக்கத் தொடங்கிய காலத்தில், ஆங்கிலம் கற்று B.A., B.L., பட்டம் பெற்ற தாமோதரம் பிள்ளையவர்களால் இந்தப் புதுமைப் புரட்சி நடந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அவ்வளவு ஏன்? பிள்ளையவர்கள் தம் தமிழாசிரியரை வணங்கிப் பாடியுள்ள ஒரு நேருக்கு நேர் பார்த்துத் தான் விடுவோமே:

“எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்தசெந் நாவினன்
முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சுன்னா
கத்துயர் மரபினோன் முத்துக் குமார
வித்தகன் அடிதலை வைத்து வாழ்த் துவனே.”

இப்பாடல் வீர சோழிய நூற் பதிப்புரையின் முகப்பில் உள்ளது.

தாமோதரனார் பிற பேரறிஞர்களைப் பாராட்டிப் பாடியிருப்பது போலவே, இவரையும் பிற பேரறிஞர்கள் சிலர் பாராட்டிப் பாடியுள்ளனர். பிள்ளையவர்களின் அச்சுப் பதிப்பின் சிறப்பினை, குமாரசாமி புலவர் என்பார் பின்வருமாறு புகழ்ந்து பாடியுள்ளார்:

“ஏட்டில் இருந்த அருந்தமிழ் நூல்கள் எனைப்பலவும்
தீட்டி வழுக்களைந்து அச்சினில் ஆக்குபு செந்தமிழ்
சேர்
நாட்டில் அளித்துயர் தாமோ தரேந்திரன் நண்ணு
புகழ்
பாட்டில் அடங்கும் தகைத்தோ புலவர்கள் பாடு
தற்கே”