பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

இம்மட்டுமா? சிறிது காலம் சென்னையில் ‘அரசியல் வரவு செலவுக் கணக்கு’ நிலையத்தின் தலைவராக நற்பெயருடன் தொண்டாற்றினார். B.A., B.L. பட்டம் பெற்ற இவர், சில்லாண்டுகள் வழக்கறிஞர் வேலை பார்க்கவும் தவறவில்லை. 1887 ஆம் ஆண்டு முதல் புதுக்கோட்டை உயர்நீதி மன்றத்தின் நீதியந் தலைவராய்ப் பொறுப்பேற்று, சமன்செய் துலாக்கோல்போல் அமைந்து, ஒருபால் கோடாது, காய்தல்-உவத்தல் அகற்றி, நடுநிலைத் தீர்ப்பு வழங்கி நற்புகழ் பெற்று விளங்கினார்.

அன்றைய அரசாங்கம் இவரது பண்பினைப் பாராட்டு முகத்தான், இவருக்கு ‘இராவ் பகதூர்’ என்னும் சிறப்புப் பட்டம் அளித்துச் சிறப்பு பெற்றது.

இவ்வாறாக, தாமோதரனார் ஏறக்குறைய அறுபத்தொன்பதாண்டு காலம் சிறப்புடன் வாழ்ந்து 1901 ஆம் ஆண்டு சனவரி முதல்நாள் இயற்கை எய்தினார். அந்தோ! இறக்கும் தறுவாயில் அகநானூறு பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அது முடியுமுன்பே தாம் முடிந்து \விட்டார். இயற்கையை யாரால் வெல்ல முடியும்?