பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

நல்ல தமிழறிஞர்; சென்னையில் வழக்கறிஞர் தொழில் புரிந்தவர்;சென்னை சைவ சித்தாந்த மகா சமாசத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்; பொதுத் தொண்டு புரிவதில் ஆர்வம் மிக்கவர்; வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் மலேயா சென்று தங்கி, அங்குள்ள இந்தியர் சங்கத்தின் தலைவராய்ப் பணிபுரிந்தவர். இப்பெரியாரது தலைமையில் யான் சொற்பொழிவாற்றி முடித்து அமர்ந்தேன். அப்போது எனக்கு வயது இருபத்தொன்று தொடங்கியிருந்தது.

யான் பேசி அமர்ந்தவுடனே, அங்கிருந்த ஐயங்கார் பெரியார் ஒருவர் எழுந்து தலைவரிடம் சென்று ‘இந்தத் தம்பி பேசியதைப்பற்றி யான் சிறிது பேச வேண்டும்; ஒப்புதல் அளியுங்கள்’ என்று கேட்டார். தலைவர் தயங்கினார். ‘பேசியவர் சிறு பிள்ளை; ஏதோ குற்றங்குறை இருந்தாலும் பெரியவர்களாகிய நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்; எனவே, இதோடு விட்டுவிடுங்கள்’ என்று தலைவர் கேட்டுக் கொண்டார். ‘நான் என்ன பேசப் போகிறேன்-எப்படி பேசப் போகிறேன் என்பதைச் சிறிது நேரம் எனக்குக் கொடுத்துப் பாருங்கள் என்று பெரியவர் வற்புறுத்தினார். பிறகு தலைவர் பெரியவர் பேச ஒப்புதல் அளித்தார். பெரியவர் பேசியதின் சாரத்தை மட்டும் சுருக்கமாக இங்கே தருகிறேன். ‘சுந்தர சண்முகம் இளம் பிள்ளையாயிருப்பினும் இவ்வளவு சிறப்பாகச் சொற்பொழிவாற்றினாரே! நான் வசதியுடையவனாயிருந்தால் அவருக்குக் ‘கனகாபிஷேகம்’ செய்வேன்’ என்பதுபோலத் தொடங்கி என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டி வாழ்த்தினார். இதுநிற்க.

1943 டிசம்பர் இறுதியில், சீர்காழியில், சைவ சித்தாந்த சமாச இளைஞர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தலைவர் முன்பு சொன்ன க. இராமநாதன் செட்டியார்