பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3



பக்குவமடைந்த விந்தணுவும் அண்டமும்


முதிர்ச்சி

மானிட இனம் பெருகி வளர்வதற்கு விந்தணுவும் அண்டமும் காரணமாக இருக்கின்றன வென்று கண்டோம். அவற்றை உண்டாக்கும் விந்துச் சுரப்பிக்கும், சூல்பைக்கும் பெரியதோர் கடமை ஏற்பட்டுள்ளது. ஏதாவது ஒரு விந்தணுவாவது அண்டத்தை அடைய வேண்டுமே என்ற கவலையால் லட்சக்கணக்கான விந்தணுக்களை விந்துச் சுரப்பி தயார் செய்து அனுப்புகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு அண்டத்தைத் தவறாமல் அனுப்புவதற்கு சூல்பைகள் இரண்டும் மாறி மாறிப் பொறுப்பேற்றுக் கொள்கின்றன.

இப்படி வெளியாகும் விந்தணுவும் அண்டமும் கருவுக்குக் காரணமாகும்படி பக்குவம் அடைந்திருக்கின்றன. அதாவது அவை நன்முக முதிர்ச்சியடைந்து வெளிவருகின்றன. முதிர்ச்சி யடைவதென்றால் என்ன என்று உங்களுக்கு ஐயம் உண்டாகும். அதைப் போக்குவதற்கு விந்தணுவிலும்