பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணாத கருப்பையூர்

23

வந்துவிடும். இவ்வாறு மாதந்தோறும் புதிதாக அமைந்த கருப்பை என்றும் இளமையோடிருந்து பூரித்த அண்டத்தை வரவேற்கத் தயாராக இருக்கிறது.

கருவுண்டாகியபின் மாதவிடாயும், இம்மாதிரி புதுப்பித்தலும் நின்றுவிடுகின்றன. குழந்தை பிறந்தபின் சில மாதங்களுக்கும் மாதவிடாய் ஏற்படுவதில்லை.

நம் உடம்பிலே பல சுரப்பிகள் (Glands) இருக்கின்றன. உடல்வளர்ச்சிக்கும், இன விருத்திக்கும், உணர்ச்சிகளைப் பெருக்குவதற்கும், இன்னும் இவை போன்ற பல முக்கிய செயல்களைச் செய்வதற்கும் அவை காரணமாகின்றன. அவற்றின் சக்தி ஆச்சரியமானது. கலவி உணர்ச்சியைத் துரண்டி மனித இனம் நீடித்திருக்கச் செய்வதும் சில சுரப்பிகளே. விந்தணுக்களை உற்பத்தி செய்து இன விருத்திக்கு விந்துச் சுரப்பி வழி செய்கின்றதென்பதை முன்பே அறிந்திருக்கிறோம்.

பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படக் காரணமாக இருப்பவையும் சுரப்பிகளே.

அண்டம் சூல்பையில் உண்டாகிறதென்று சொன்னேனல்லவா? இவ்வண்டத்திற்கு ஊட்ட மளிக்க அதிலே அணுக்கள் நிறைந்த பகுதி ஒன்றிருக்கிறது. அவ்வணுக்களே அண்டத்திற்கு உணவு. அண்டம் சூல்பையை விட்டு வெளியேறிய பின் இவ்வணுக்கள் பலவாகப் பெருகி மஞ்சள் நிறமான