பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

மாயப் பிறவி

கரு

பூரித்த அண்டம் தனது முயற்சியாலேயே வளர்ந்துகொண்டு கருப்பை வரையிலும் நகர்ந்து வருகிறது என்று சொன்னேன். கருப்பையூரிலே முதலில் ஒர் இடம் தேடிப் பிடிக்கவேண்டும். அந்த இடத்திலே மெல்லக் குடைந்து ஒட்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்து தாயின் உடம்பிலுள்ள ரத்தக் குழாய்களோடு தொடர்பு செய்துகொண்டு விட்டால் அதன் தொல்லை தீர்ந்து போகும். பிறகு தாயின் உடம்பிலிருந்தே வளர்வதற்கு வேண்டிய உணவுச் சத்துக் கிடைத்துவிடும்.

கருப்பையின் சுவரிலே குடையத் தொடங்கும் போது அங்குள்ள அணுக்கள் எதிர்த்துப் போராடாமல் விடுவதில்லை. சுவரில் பங்கம் உண்டாகாமல் தடுப்பது அவற்றின் கடமையென்று எண்ணுகின்றன போலும். ஆனால், கருவாக மாறிய அண்டம் விடாது தாக்கி எப்படியோ இடம் பிடிக்க முயலும். அதற்கு வெற்றி கிடைத்துவிட்டால் பிறகு கருப்பை அதனேடு போராடுவதை நிறுத்திவிட்டு அதைப் பேணி வளர்க்கத் தொடங்கிவிடுகிறது.