இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
கருவில் வளரும் குழந்தை
தாயின் ரத்தத்தில் உணவும், பிராணவாயுவும், நீரும் உள்ளன. கருக்குடையிலுள்ள அணுக்கள்
அவற்றை எடுத்து நஞ்சுக்கொடியிலுள்ள ரத்தக் குழாய்களின் மூலம் கருவிற்கு அனுப்புகின்றன. இதிலிருந்து தாயின் ரத்தம் நேரடியாகக் கருவில் ஓடுவதில்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.
கரு வளர்ச்சியடைந்துகொண்டு வரும்போது அதிலும் கழிவுப் பொருள்கள் உண்டாகுமல்லவா?