இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
கருவில் வளரும் குழங்தை
குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பது பற்றித் தனியாகப் பின்னல் ஆராய்வோம்.
இரண்டாம் மாதத்திலே கருவிற்கு அசையவும், நெளியவும் முடியும். அதன் எலும்புக் கூடு மெதுவாக அமையத் தொடங்குகிறது. அதனால் உடம்பின் தோற்றம் செம்மைப்படுகின்றது. வெளியுறுப்புக்களைப் போலவே உள்ளுறுப்புக்களும் நன்கு அமைந்துவிடுகின்றன.