பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்

43

இருக்கும் நிலைமையையும், அதை யணுகியுள்ள தாயின் உடலுறுப்புக்களையும் 19-ம் படத்தில் காணலாம்.

கடமை உணர்ச்சியோடு தன் வேலையைச் செய்து வந்த கருக்குடை ஒன்பதாவது மாத இறுதியில் அலுத்துப் போகிறது. அதன் கடமையும் அப்போது முடிந்துவிடுகிறதல்லவா? இனிமேல் குழந்தை உலகிற்கு வந்து வேறுவிதமாக உணவும், பிராண வாயுவும் பெற்று உயிர் வாழ வேண்டியதுதானே?