பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்து மாத விந்தை

47

ஒன்பது மாத காலமாகத் தனது ரத்தத்திலிருந்து உணவும், பிராணவாயுவும் அளித்துவளர்த்த தாய் குழந்தை பிறந்த பிறகும் அதற்குப் பால் கொடுத்து வளர்க்கிறாள். தாய் செய்யும் நன்றிக்கு இணை கூறுவது கடினம். அவளை முன்னறி தெய்வமாகக் கூறுவது எவ்வளவு பொருத்தம் என்பதை இதுவரை அறிந்துகொண்ட உண்மைகளால் நன்கு உணரலாம்.