பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஆணா பெண்ணா

குழந்தை பிறந்தவுடன் அது ஆணா பெண்ணா என்பது திட்டமாகத் தெரிந்துவிடுகிறது. ஆனால் அதுவரையிலே பொறுமையோடு காத்திருக்க நம்மால் முடிகிறதா? நமது ஆசைதான் விடுகிறதா? கருப்பையிலிருக்கும்போதே அது ஆணா அல்லது பெண்ணா என்று அறிந்துகொள்ளப் பெற்றோர்களும் மற்றவர்களும் ஆசைப்படுகிறார்கள். அதற்கு என்னென்னவோ தந்திரங்கள் செய்து பார்க்கிறார்கள் சோதிடம் பார்க்கிறார்கள் சிலர்: ஆருடம் பார்க்கிறார்கள் சிலர்.

எனக்கு ஒரு ரேகை சாஸ்திரக்காரனைத் தெரியும். அவன் சொல்லுவது பெரும்பாலும் பொய்யாவதே கிடையாது. யார் கேட்டாலும் அவன், “ஆண் குழந்தைதான் இந்தத் தடவை பிறக்கும்; அது தவறினால் பெண் குழந்தை நிச்சயமாகப் பிறக்கும்” என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லுவான். அவன் வாக்குப் பலிக்கிறதென்று பலர் அவனிடம் கையைக் காட்டுவார்கள். நல்ல வரும்படி அவனுக்கு.

சாஸ்திர முறையாகக் கருவிலுள்ள குழந்தை ஆணென்றோ பெண்ணென்றோ சொல்லுவதற்கு இதுவரை யாரும் வகை காணவில்லை. ஒன்றுமட்டும்