பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்மகன் தருவது

7

யது முதல் தொழில் செய்கின்றன. ஆண்குறியிலேயுள்ள விந்துச் சுரப்பி அப்படிச் செய்வதில்லை. சுமார் 13, 14, அல்லது 15 வயதாகும்போதுதான் இது விந்துவைச் சுரக்கத் தொடங்குகிறது. இந்த விந்துதான் ஆண் தண்மைக்குரிய உடற் கட்டினை அமைப்பதற்கும், மூளையையும் நரம்புகளையும் ஊட்டி வளர்ப்பதற்கும், இனவிருத்தி செய்வதற்கும் பயன்படுகிறது. விந்துச் சுரப்பியில் உண்டாகும் விந்து, விந்து நாளத்தின் வழியாக விந்துப் பையை அடைகிறது. கலவியின்போது விந்துப்பை சுருங்கி அதை வெளிப்படுத்திச் சிறுநீர்ப் புறவழியின் மூலம் பெண்ணுறுப்பாகிய யோனியிற் சேர்க்கிறது.

ஒரு தடவை வெளியாகும் விந்துவில் லட்சக் கணக்கான விந்தணுக்கள் (Sperm cells) இருக்கின்றன. கருவுண்டாவதற்கு இவற்றில் ஒன்றே போதும்.

விந்தணு மிக மிகச் சிறியது; வேல் போன்ற உருவமுடையது. அதைக் கண்ணாலே பார்க்க முடியாது; பூதக் கண்ணாடியின் மூலந்தான் பார்க்கலாம். அதற்கு ஒரு வாலிருக்கிறது. அதைச் சுழற்றிச் சுழற்றி விந்தணு முன் செல்லுகிறது. ஆண் குறியை விளக்கும் படத்திலே ஆறு என்று எண்ணிட்ட ஒரு பாகம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அதற்கு