பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

“ஸார், என் நிமித்தம் என் பிரதரை எக்ஸ்யூஸ் பண்ணுங்கோ ஸார் !” என்று நைந்த குரலில் கேட்டுக் கொண்டார், டாக்டர்.

பூவழகியுடன் ஞானபண்டிதன் அங்கிருந்து கிளம்பினான். இந்தப் பூ விரல்களா அந்தப் பாவியை அவ்வளவு கன்றும்படி அறைந்தன! ...பேஷ் பேஷ் !” என்று போற்றினான் அவன். “இந்த விரல்களுக்கு அப்பால் ஒரு நல்ல பரிசு தருவேன் !”

அவள் அவனிடமிருந்து தன் கரங்களை விடுவிக்க முடியாமல் திணறியது ஒரே ஒரு நிமிஷம் மட்டுந்தானாம் !....