பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

தாம் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. அவையும் அவனுக்கு ஒரு விடிவைச் சொல்லவில்லை!

கைக்கடிகாரத்தைப் பார்த்தான் சிவஞானம்.

மணி ஆறு, ஐம்பத்தேழு!

திரும்பினான்

காலடியில் 'கிரைப் வாட்டர்' சீசா இருந்தது.

உடனே குழந்தையை நோக்கினான்.

அது அழகு காட்டித் தூக்கம் பயின்றுகொண்டேயிருந்தது

"ஈஸ்வரா!" என்று தன்னையும் மீறிக் கூவினான் சிவஞானம்.

"இதோ, வந்திட்டேன்!" என்ற ஒரு குரல் அசரீரி போலக் கேட்டது!