பக்கம்:கற்சுவர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aլ 8 கற்சுவர்கள்

என்னென்ன இருக்கிறது. என்னென்ன இல்லை என்று பார்க்க வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தார்கள். கருவூலத்தின் பட்டியல் அடங்கிய புராதனமான நோட்டுப் புத்தகத்தைத் திவான்கள் பதவி வகித்த பழங்காலத்தில் அவர்கள் வைத்திருப்பது வழக்கம். திவான்களிடம் இருக்கும் அதே பட்டியலின் நகல் ஒன்று ராஜாவிடமும் இருக்கும். ராஜாவிடம் இருக்கும் பட்டியல் தொடர்ந்து வாரிசுப்ப்டி கை மாறிக் கொண்டிருப்பதும். திவான்களிடம் இருக்கும் பட்டியல் அடுத்தடுத்துப் பதவிக்கு வருகிற திவானிடம் கைமாறிக் கொண்டிருப்பதும் வழக்கம். இவான்களின் காலம் முடிந்து அந்தப் பதவி ஒழிக்கப்பட்ட பின்னர் இரண்டு பட்டியலுமே மகாராஜாவின் கைக்குப் போய்விட்டதாகவும் தன்னிடம் அந்த மாதிரிப் பட்டியல் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதாகவும் காரியஸ்தர்' பெரிய கருப்பன் சேர்வை கூறினார். பழைய ஏற்பாட்டின் படி திவானுக்குத் தெரியாமல் ராஜா எதுவும் செய்ய முடி யாது. பணத்தட்டுப்பாடு காரணமாகத் திவான் பதவி ப்ோனதும் காலஞ்சென்ற பெரிய ராஜாவுக்குத் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலைமை ஏற்பட்டது. இஷ்டம் போல் எதையும் வாங்கினார். தோன்றியபடி அரண்மனைச் சொத்துக்களை விற்றார் அவர். - - - எதற்கும் காலஞ்சென்ற பெரிய ராஜாவின் அந்தரங்க அறையில் தேடிப்பார்க்கலாமே? ஒருவேளை அந்தப். பட்டியல் அங்கே அகப்பட்டாலும் அகப்படலாம். பட்டியல், கிடைத்தால் எதெது மீதமிருக்கிறது எதெது பறிபோயிருக் கிறது என்றாவது கண்டு பிடிக்கலாம். இல்லாவிட்டால் எதெது எல்லாம் முன்பு இருந்தன, எதெது எல்லாம் இப்போது இல்லை என்பதைப் பிரித்துக் கண்டுபிடிக்கவே முடியாது. என்ன? நான் சொல்வது புரிகிறதா மிஸ்டர் சேர்வை?...' . - * , , '.

பெரிய கருப்பன் சேர்வை புரிகிறது என்பதற்கு அடை யாளமாக மாமாவை நோக்கித் தலையை ஆட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/120&oldid=553092" இலிருந்து மீள்விக்கப்பட்டது