பக்கம்:கற்சுவர்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

தனசேகரனிடம் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவன் எந்தவிதமான பரபரப்பும் அடையவில்லை. மாவட்டக் கலெக்டருக்கு அதைப்பற்றித் தகவல் தெரிவிக்கு மாறு காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையை வேண்டிக் கொண்டான் ஆவன். -

சேர்வைகாரர் கொஞ்சம் தயங்கியது போலத் தோன் நியது. 'காண்ட்ராக்ட் காரங்க கிட்டப் பேசி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே......? இதைப் போயி கவர்மென்ட்கிட்டச் சொல்லணுமா?' என்று வாய் திறந்தே அவனைக் கேட்க 'வும் செய்தார் அவர். தனசேகரன் சொன்னான். -

"முறைப்படி அவங்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு அப்புறம் புதையலை நம்ம மியூசியத்திலே வச்சிக்க அனுமதி கேட்கலாம்.' - - "கவர்மெண்டிலே ஒண்ணை நீங்களாப் போயி வலுவிலே சொல்லிட்டீங்கன்னா அப்புறம் எல்லாத்துக்குமே அவங்க வந்து நின்னுடுவாங்க. எதையும் அவங்ககிட்டவே ஒப்படைச்சாகனும்,' -

வரட்டுமே? அதனாலே என்ன தப்பு: நல்லதுதானே? அலங்களுக்குத் தெரியாமே நாம எதுவும் பண்ணணும்னு நெனைக்கவியே நமக்கு எதுக்குப் பொதுச் சொத்து?" - காரியஸ்தர் கலெக்டருக்குத் தகவல் தெரிவிக்கச் சென்றார். அரண்மனை எல்லைக்குள்ளே கிடைத்த ஒரு புதையலைப் போப் இளையராஜா அரசாங்கத்துக்குத். தெரிவிக்கச் சொல்கிறாரே என்று காரியஸ்தருக்குச் சடை வாகத்தான் இருந்தது; அணைக்கட்டுக்காகக் கல் எடுத்துக் கொள்ளும் இன்ஜீனியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் சுவரை அழித்துக் கற்களை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று. தான் தெளிவாக இருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/192&oldid=553166" இலிருந்து மீள்விக்கப்பட்டது