பக்கம்:கற்சுவர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கற்சுவர்கள்

வது வந்து ஏதாவது கேட்டுக்கிட்டே இருப்பாங்க" என்று: உடனே தனசேகரனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்படச் செய்யவும் தயாரானார். நிருபர்கள் அப்போதும் விடவில்லை. "ப்ளீஸ்...அப்படியே உங்க மாமாவோட கொஞ்சம் நில்லுங்க. ஒரே ஒரு படம் எடுக்கிறோம்' என்று. புகைப்படம் பிடித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

"நீங்கள் ளாம் நட்சத்திரேயனோட அவதாரம்பா' என்றார் தங்கபாண்டியன். -

"தங்கள் பெண்ணை இளையராஜாவுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக ஒரு வதந்தி அடிபடுகிறதே?’’ 'அட சரிதான் போய்யா. அடியும்படலே. உதையும் படலே. கலியானப்பத்திரிகையிலே போட வேண்டியதை எல்லாம் நியூஸ் பேப்பர்வியே போடறேன்னா எப்ப டிப்பா?'

பத்திரிகை நிருபர்கள் சிரித்துக்கொண்டே போய் விட் டார்கள். அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையையும், வேறு இரண்டொரு முக்கியஸ்தர்களையும் ஏற்றிக்கொண்ட பின் ஜீப் அரண்மனைக்குப் புறப்பட்டது. 'தம்பி! வசந்த மண்டபத்திலே போய்க் குளிச்சு உடை மாத்திக்கிட்டு அங்கேயே சாப்பாட்டைக் கொண்டாரச் சொல்லிடட்டுமா? இல்லாட்டி நாமளும் தேவார மடத்தி, லேயே போய்ச் சாப்பாட்டை முடிச்சிட்டு வந்திர லாமா?’’

'நாம இங்கே வசந்த மண்டபத்திலே நாலு அஞ்சு பேருக்குச் சாப்பாடு மாத்தியாறச் சொன்னா அங்கே அரண் மனையிலே யாராவது நாற்பது பேருக்கு மாத்திக்கிட்டு வரச் சொல்லுவாங்க. வீணா ஆளுங்க அங்கேயும் இங்கே யுமா அலைய வேண்டியிருக்கும், தேவார மடத்துலே போயே ஒரு மூலையிலே உட்கார்ந்து நாமும் ஒருவாய் சாப்பிட்டோம்னு பேர்பண்ணிட்டு வந்துடலாம். மாமா' என்றான் தனசேகரன், மாமாவும் சம்மதித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/54&oldid=553026" இலிருந்து மீள்விக்கப்பட்டது