பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


சிலேடைப் பொருள் தந்து நிற்கும் இடங்கள் பல உள்ளன.

வேறு இடங்களில் கற்பனை

இவ்வாறு அணிகளைக் கூறும் இடங்களைத் தவிர, வேறு இடங்களிலும் கவிஞரின் கற்பனைத் திறத்தைக் காணலாம். இயல்பாகவுள்ள நிகழ்ச்சிகளே வரலாற்று நிகழ்ச்சியுடன் பொருத்திக் கூறுங் கால் பல கற்பனைச் சிகரங்கள் தென்படுகின்றன. பேய்களின் இயல்புகளைக் கூறுங்கால் நொண்டிப் பேய், முடப்பேய், குருட்டுப்பேய், ஊமைப்பேய், செவிட்டுப் பேய், குறட்டுப்பேய், கூன்பேய் ஆகிய பேய்களுக்கு உறுப்புக் குறை நேர்ந்ததற்குக் கூறும் காரணங்கள் கவிஞரின் கற்பனைத் திறனைக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டை மட்டிலும் காண்போம்.

விருத ராசப யங்கரன் முன்னொர் நாள்
வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங்
குருதி யுங்குட ருங்கலந்(து) அட்டவெங்
கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும்.[1]

[விருதசாசபயங்கரன்-குலோத்துங்கன் ; குருதி-செந்நீர்;]

இது குருட்டுப் பேயின் நிலையைக் காட்டுவது. குலோத்துங்கன் சக்கரக் கோட்டத்தை அழித்து வெற்றி கொண்ட பொழுது போர்க்களத்தில் பேய்கள் கூழட்டு உண்டனவாம். அப்பொழுது தாழியிலிருந்து கூழ் தெறித்து ஒரு பேயின் கண்ணில் விழ, அதன் கண் குருடாய் விட்டதாம்.


  1. தாழிசை-147