பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவைகளின் களஞ்சியம்

111


வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி
வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம்
அமனரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே

[வரை-மலை; மாசு-பழிச்சொல்; தூறு-புதர் வாங்கி-களைந்து; அரை-இடை; கலிங்கம்-ஆடை; உரிப் புண்ட-களையப்பெற்ற; அமணர்-சமணர்.]

வேடத்தால் குறையாது முந்நூ லாக
வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை
ஆடப்போந் தகப்பட்டேம் கரந்தோம் என்றே
அரிதனைவிட்டு உயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே

[சிலை-வில்; மடித்திட்டு-சுருட்டி; அரி-போர்க்கருவி]

குறியாகக் குருதிகொடி ஆடை யாகக்
கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்(து)
அறியீரோ சாக்கியரை யுடைகண் டால்என்
அப்புறமென் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே

[குறி-புத்தர் அடையாளம்; குருதி-செந்நீர்; கொடி-கொடிச்சீலை; குஞ்சி -முடிமயிர்; முண்டித்து - மொட்டை யடித்து, சாக்கியர்-புத்தர்]

சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம்
தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்(டு)
அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர்
ஆங்கே[1]

என்ற தாழிசைகளில் இளிவரல் சுவையினைக் காண்க. வீரர்கள் மறைந்தோடுவது தகுதியன்றன்றோ?


  1. தாழிசை.466, 167, 468. 469.