பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவைகளின் களஞ்சியம்

115


முடிவு

இலக்கியங்களை எல்லோரும் ஒரேமாதிரி அனுபவிக்க முடியாது. அதுபற்றியே இலக்கியங்களைப் படிப்பதில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. நம் நாட்டவர் இலக்கியம் மனத்திற்கு இன்பம் அளிப்பதைவிட உள்ளத்திற்கும் அமைதியை நல்க வல்லதாக இருக்க வேண்டும் என்றும் கருதினர். இலக்கியங்களில் காணப்பெறும் சுவைகள் இப்பயனைத் தரவல்லவை; சுவைகளால் புலன்கள் தெளிவடையும். எனவே, கவிஞர்கள் தம் இலக்கியங்களில் சுவைக்கு முதலிடம் தரலாயினர். கலிங்கத்துப் பரணியைச் 'சுவைகளின் களஞ்சியம்' என்று கூறலாம்.