பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

திரு. வி. ஆர். எம். செட்டியார் அவர்கள் நல்ல இலக்கியச் சுவைஞர்; சிறந்த பதிப்பாளர். காரைக்குடி ஸ்டார் பிரசுரத்தின் அதிபர். அவர் என் நூலை முற்றும் நோக்கிப் பாராட்டுரை வழங்கினமைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

இந் நூலிலுள்ள கட்டுரைகளில் ஐந்து 'தினமணிச் சுடரில்' வெளிவந்தவை. அவற்றை வெளியிட்டுக் கொள்ள இசைவு தந்த அப் பத்திரிகை ஆசிரியருக்கு என் நன்றி. காரைக்குடி செல்விப் பதிப்பகத்தார் இந் நூலை அழகுறப் பதிப்பித்து, வெளியிட்டு, கற்போர் கரங்களில் கவின் பெறச் செய்தமைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

யான் மேற்கொண்டுள்ள இலக்கியத் தொண்டில் வெற்றி காண்பதற்கு உறுதுணையாக நிற்கும். எல்லாம் வல்ல இறைவனுக்கு என் வணக்கங்கள்.

காரைக்குடி
30-3-'57
ந. சுப்பு ரெட்டியார்