பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



140

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


களை வரலாற்று நூல்களில் விரிவாகக் கண்டு கொள்க. அவன் மேற்கொண்ட போர்களைப் பற்றி கலிங்கத்துப் பரணி குறித்திருப்பது முன்னரே சுட்டப் பெற்றது.[1] அவன் கருணாகரனைக் கொண்டு கி. பி. 1112-ல் நடத்திய வட கலிங்கப் போர்தான் கலிங்கத்துப் பரணியின் நூற் பொருளாக அமைந்தது. கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப் பெறும் நிகழ்ச்சிகள் யாவும் செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் காணப் பெறும் செய்திகளோடு ஒத்திருப்பதாக அறிஞர்கள் ஆராய்ந்து கூறி

யுள்ளனர்.[2]


  1. இந்நூல் பக்கம்--60
  2. T. V. சதாசிவ பண்டாரத்தார் ; பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி-II. பக்கம்-29,