பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடைதிறப்பின் உட்பொருள்

25


யொருவர் வேண்டுவதாக மணிவாசகப் பெருமான் பேசுகிறார்,

முத்துஅன்ன வெண்ணகையாய்!
முன்வந்து எதிர்எழுந்து, என்
அத்தன், ஆனந்தன்
அமுதன் என்று அள் ஊறித்
தித்திக்கப் பேசுவாய்;
வந்துஉன் கடைதிறவாய்![1]

என்றும்,

கேழில் பரஞ்சோதி
கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள்
பாடினுேம் ; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன
உறக்கமோ? வாய் திறவாய் ;
ஆழியான் அன்புடைமை
ஆம்.ஆறும் இவ்வாறோ ?
ஊழி முதல்வனாய்
நின்ற ஒருவனை
ஏழைபங் காளனேயே
பாடேல் ஓர் எம்பாவாய் ![2]

என்றும் அவர் பாடியுள்ளதைக் காண்க. இங்கு குலோத்துங்கனின் வெற்றியைச் சிறப்பித்துப் பாடுவதற்கு நகரத்து மகளிர் ஒருவரையொருவர் சென்று அழைப்பதாகச் சயங்கொண்டார் அமைத்துள்ளார். பெண்களின் இயற்கையழகு, செயற்கையழகு, மென்மைத்தன்மை, கணவன்மாருடன் அவ்ர்கள் ஊடியும் கூடியும் அனுபவித்த இன்பம் முதலியவற்றை


  1. திருவெம்-3
  2. திருவெம்-8