பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடைதிறப்பின் உட்பொருள்

25


யொருவர் வேண்டுவதாக மணிவாசகப் பெருமான் பேசுகிறார்,

முத்துஅன்ன வெண்ணகையாய்!
முன்வந்து எதிர்எழுந்து, என்
அத்தன், ஆனந்தன்
அமுதன் என்று அள் ஊறித்
தித்திக்கப் பேசுவாய்;
வந்துஉன் கடைதிறவாய்![1]

என்றும்,

கேழில் பரஞ்சோதி
கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள்
பாடினுேம் ; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன
உறக்கமோ? வாய் திறவாய் ;
ஆழியான் அன்புடைமை
ஆம்.ஆறும் இவ்வாறோ ?
ஊழி முதல்வனாய்
நின்ற ஒருவனை
ஏழைபங் காளனேயே
பாடேல் ஓர் எம்பாவாய் ![2]

என்றும் அவர் பாடியுள்ளதைக் காண்க. இங்கு குலோத்துங்கனின் வெற்றியைச் சிறப்பித்துப் பாடுவதற்கு நகரத்து மகளிர் ஒருவரையொருவர் சென்று அழைப்பதாகச் சயங்கொண்டார் அமைத்துள்ளார். பெண்களின் இயற்கையழகு, செயற்கையழகு, மென்மைத்தன்மை, கணவன்மாருடன் அவ்ர்கள் ஊடியும் கூடியும் அனுபவித்த இன்பம் முதலியவற்றை


  1. திருவெம்-3
  2. திருவெம்-8