பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன்;-கண்டக்கால்
பூண் ஆகம் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோடு உடன்பிறந்த நான்.

என்ற முத்தொள்ளாயிரப் பாடலையும் உள்ளத்திற் கொண்டே,

பேணுங் கொழுநர் பிழைகளெலாம்
பிரிந்த பொழுது நினைந்து அவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
கனப்பொற் கபாடந் திறமினோ

என்று சயங்கொண்டார் பரணியில் பாடியிருத்தல் வேண்டும்.

தரைமகளும் தன்கொழுநன் உடலந் தன்னைத்
தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணாட்டு
அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்

என்ற கலிங்கத்துப் பரணிப் பாடலில் உள்ள வீரச்சுவையும் கருத்து நயமும் ஈடும் எடுப்பும் அற்றவை.

சிற்றரசர்கள் பேரரசர்களின் அடியில் விழும் போது திருவடியில் சூடும் முடிபற்றி, கவிச் சக்கரவர்த்தி கம்பன் உள்ளிட்ட புலவர் பலரும் பாடியுள்ளனர். எனினும்,

முடிசூடும் முடியொன்றே முதலபயன் எங்கோமான்
அடிசூடும் முடிஎண்ணில் ஆயிரம்நூ றாயிரமே.

என்ற சயங்கொண்டாரின் பாட்டு எல்லாவற்றிற்கும் சிகரமாக விளங்குகின்றது.