பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை ஊற்று

77


என்ற தன் சொல் லோவியத்தால் கார்காலத்தையே கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்.

அணிகள்

ஒரு கருத்தை சாதாரணமாகத் தெரிவிப்பதற்குப் பதிலாகக் கவிஞர்கள் 'அலங்காரமாக'த் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நடை பெறும் முறைகளை இலக்கண நூலார் தொகுத்து 'அலங்காரங்கள்' என்றும் 'அணிகள்' என்றும் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் இவற்றை Figures of speech என்று வழங்குவர். தான் காணும் பொருள்களை ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பு மனிதனிடம் இயற்கையாகவே அமைந்து கிடப்பது, அந்த இயல்பு தான் உவமை அணியின் வித்து. பொருள்களிடம் காணப்பெறும் ஒப்புமைப்பகுதி பொறிகளால் காணக்கூடிய அளவிற்கு வெளிப்பட்டு நிற்பதைத் தான் மனிதன் உவமையால் கூறி மகிழ்கின்றான்; அவ்வுவமை செய்திகளை நினைவில் இருத்திக்கொள்வதற்கும் அவற்றை நெஞ்சில் ஆழப் பதித்துக் கொள்வதற்கும் துணையாக இருக்கின்றது. இந்த உவமை அணிதான் பிற்காலத்தில் தோன்றிய எல்லா அணிகளின் தாய் என்பது அறிஞர் பலரின் ஒப்ப முடிந்த துணிபாகும். ஆசிரியர் தொல்காப்பியனாரும் இதுபற்றியே தன் நூலில் “உவமயியல்" என்ற ஒன்றையே வகுத்துக்கொண்டார். உவமையிலிருந்தே ஏனைய - அணிகள் தோன்றின என்பதை,

"உவமை யென்னும் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து