பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3



ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவ னுக்கு வகுப்பது பரணி

என்ற இலக்கணத்துக்கு

மாவா யிரமும் படக்கலிங்கர்
மடிந்த களப்போர் உரைப்போர்க்கு
நாவா யிரமும் கேட்போர்க்கு
நாளா யிரமும் வேண்டுமால்


என்ற சயங்கொண்டாரின் பாட்டு இலக்கியமாக நயம்பட அமைந்திருக்கின்றது.

எடுத்துக்கொண்ட பாட்டுடைத் தலைவன் கடவுள் அவதாரமே என்று கொண்டு,

தேவரெலாம் குறையிரப்பத் தேவகிதன்
திருவயிற்றில் வசுதே வற்கு
மூவுலகுந் தொழநெடுமால் முன்னொருநாள்
அவதாரஞ் செய்த பின்னை,
அன்றிலங்கை பொருதழித்த அவனே அப்
பாரதப்போர் முடித்துப் பின்னை
வென்றிலங்கு கதிராழி விசயதரன்
எனஉதித்தான் விளம்பக் கேண்மின் !


என்று ஆசிரியர் பாடியிருக்கும் நயம் பெரிதும் இன்புறத் தக்கது.

அருமறையின் நெறிகாட்ட அயன் பயந்த
நிலமகளை அண்டங் காக்கும்
உரிமையினில் கைப்பிடித்த உபயகுலோத்
தமன்அபயன் வாழ்க

என்று பாட்டுடைத் தலைவனை ஆசிரியர் வாழ்த்துவது சீரியது.