பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
105



வந்து சேரவே, அடங்கியிருந்த அரசர்கள் விடுதலைபெற வீறுகொண்டு எழுந்து விட்டார்கள். அப்புரட்சிப் படைக்குத் தலைமை தாங்கினான், இருபத்தைந்து ஆண்டு நிரம்பாத இளையோனாகிய சந்திரகுப்தன். வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கொள்ளையடித்துக் குடியோம்பும் குடியில் வந்த வீரம் மிக்க இளைஞர்களைக் கொண்ட ஒரு பெரிய படைக்குத் தலைவனாய் தகுதி பெற்றிருந்த சந்திரகுப்தன் பஞ்சாப் மாகாணத்தில் பாராண்டிருந்த கிரேக்க நாட்டுக் காவலனைக் கொன்று, அவனுக்குத் துணைநின்ற படைகளை அழித்து அம்மாகணத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.

வடமேற்கு எல்லையில் வெற்றி கண்டதும், அவ்வீர இளைஞன் உள்ளம் தான் பிறந்த, மகதநாட்டு மண்ணின் மீது சென்றது; உடனே தன் துணைவரோடு மகதநாடு சென்று சேர்ந்தான்; அக்காலை அந்நாட்டு அரியணையில், அரசியாரின் கள்ளக் காதலால் பிறந்த கான்முளை அமர்ந் திருந்தான். அவனைப் பெற்றவன் பால் பொருந்தியிருந்த அத்தனை இழி பண்புகளும் அவன்பாலும் பொருந்தியிருந்தன. பொருளாசையில் பெற்றவனையும் மிஞ்சியிருந்தான் அவன் வரிமேல் வரியென விதித்து, நாட்டு மக்களை வாட்டி வருத்தினான், ஒழுக்கம் என ஒரு பொருளும் உலகில் உளதோ?’ என்று கேட்குமளவு உயர்ந்திருந்தது அவன் செயல், அதனால் நாடனைத்தும் அவனை வெறுத்தது, அவன் ஆட்சி அழிவுறும் நன்னாளை ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருந்தார்கள் மகத நாட்டு மக்கள். ஆனால் தங்கள் அண்டை நாட்டு அரியனைபில், அறிவிழந்து அழிசெயல் புரிவான் ஒருவன் அமர்ந் திருப்பது தம் ஆக்கத்திற்கு வழியாகுமேயல்லது. சந்திர குப்தன் போலும் ஆற்றல்மிக்க அடலேறு ஒருவன். அமர்வது, தம் ஆக்கத்திற்கு வழியாகாது. மாறாகத் தம் அழிவிற்கே அது துணைபுரியும் என உணர்த்த மகதத்தின் அண்டை நாட்டு மன்ன்ர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு, மகதத்தில் சந்திரகுப்தன் எழுப்பிய புரட்சிப்போர் வெற்றி