பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


பெறாதிருக்கப் பெரும்பாடுபட்டனர். ஆனால், அரசியல் புரட்சியை வெற்றி பெற நடத்த வல்ல உற்ற துணைவன் ஒருவன், சந்திரகுப்தனுக்குக் கிடைத்திருந்தான். அரசியல் சூழ்ச்சிகளில் வல்ல அவன் ஓர் ஆரியன். சாணக்கியன், கெளடல்யன், விஷ்ணு குப்தன் எனப் பல பெயர் இட்டு அழைக்கப் பெறும் அவன் அறிவின் பெருந்துணையோடு, பிறந்த நாட்டில் புரட்சிக் கொடியேந்திய சந்திர குப்தன், விரைவில் வெற்றிக் கொடி நாட்டி விட்டான். அரியணையில் வீற்றிருந்த, அவ்விழி குலத்தான் கொல்லப் பட்டான். அதைத் தொடர்ந்து அவனுக்கு உறவுடையார் அனைவரும் அறவே அழிக்கப்பட்டனர். சந்திரகுப்தன் மகத நாட்டின் மன்னனாய் மணி முடி புனைந்து கொண்டான். தான் பிறந்த குடிக்கு மௌரியர் குடி எனத் தன்னை ஈன்ற தாயின் பெயரால் பெயர் நாட்டி, அவளுக்கு அழியாத நினைவுச் சின்னம் அமைத்து, அன்பு வழிபாடாற்றினான்.

மௌரிய மரபின் முதல்வனாகிய சந்திர குப்தன், ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதும், ஒரு சிறிதும் ஒய்வு கொண்டிலன். நந்த அரசனிடமிருந்து கைப்பற்றிய மகத நாட்டுப் படையைப் பெருக்கினான். அது ஆறு நூறாயிரம் வீரர்களையும் முப்பாதாயிரம் குதிரைகளையும், ஒன்பதாயிரம் களிறுகளையும், எண்ணித் தொலையாத் தேர்களையும் கொண்ட பெரும் படையாய் மாறிற்று. அப்பெரும் படையும், அந்தணன் சாணக்கியனின் அரசியல் சூழ்ச்சித் திறனும் துணைவரைப் போர் மேற்கொண்டு புறப்பட்ட அவன் விரைவில் வடநாட்டரசுகள் அனைத்தையும் வென்று அணைத்துக் கொண்டான். இமயப் பெருவரையின் அடிமுதல், தருமதையாற்றின் கரை வரையும் பரவி. பிருந்த வடதிச்ை நாடுகள் பலவும் அவன் ஆணைக் கீழ் வந்து அடைந்தன. மேற்கில் அரபிக் கடலும், கிழக்கில் வங்கப்பெருங் கடலும் அவன் நாட்டின் இருபுற எல்லைகளாய் நின்று காத்தன. இந்தியாவின் வரலாறு கண்ட