பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118



முதலில் வெற்றிகொள்ள வேண்டும் என்று அறிந்த வட நாட்டுப்படை. மோகூர் அரணைத் தாக்கி அருஞ்சமர் புரிந்தது. தேர்ப்படையோடு கூடிய வடநாட்டுப் படையாலோ, அதற்குத் துணைவந்த வடுகபடையாலோ, மோகூர் மன்னனைப் பணி கொள்ள முடியவில்லை. மாறாக, அவன்தன் கீழ்ப்பணி புரியும் கோசர் படைத் துணையால், வந்த வடநாட்டாரை வென்று துரத்தினான். தமிழகத்தில் வெற்றி காணமாட்டாமலே, பிந்து சாரன் வடநாடு திரும்பிவிட்டான். தமிழகத்தில் அவன் கண்ட பெருந்தோல்வி,தென்கலிங்கநாட்டையும் மறக்கச் செயது விட்டது, அதை வெல்லக்கருதிய கருத்தையும் கை விட்டுத் தலைநகர் சென்று சேர்ந்தான்.

வடுகர் துணை செய்யவந்த மௌரியர் படை யெடுப்பை முறியடித்த தமிழகத்தாரின் தன்னேரில்லாப் பேராற்றலைத் தமிழ்ப்புலவர்கள் தாம் பாடிய சங்கச் செய்யுள்களில் வைத்து வாயாரப் பாராட்டி வாழ்த்தியுள் ளார்கள். அவை இவை;

வென் வேல் - விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த்திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறைவாம்”

              -கள்ளில் ஆத்திரையனார்: புறம் 175.

கனைகுரல் இசைக்கும் விரைசெலல் கடுங்கணை முரண்மிடு வடுகர் முன்னுற, மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு.” “வெல் கொடித் துனைகால் அன்ன புனைதோக் கோசர், தொன்முது ஆலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பிடித்து இரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின் பகைதலை வந்த மாகெழுதானை வம்பமோரியர்.” .

                    -மாமூலனார் :அகம் 28 1, 251,