பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


சிறந்த கலைஞனாய் விளங்கினான். அதனாலேயே மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் நுழையக் கருதும் வெளிநாட்டாரை தடுத்து நிறுத்தி, வென்று துரத்தும் படைத்தலமாய் விளங்கிய தக்ஷசீல மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பு அத்துணை இளைமைப் பருவத்திலேயே அவன் பால் ஒப்படைக்கப்பட்டது,

அசோகன் ஆட்சி நலத்தால், வடமேற்கு மாகாணத்தின் அச்சம் அகன்று அமைதி நிலவுகிறது என்பதை அறிந்து கொண்டதும், பிந்துசாரன், அவனை மேற்கு மாகாணத் தலைநகர்க்கு அனுப்பினான். தக்ஷசீலம் எல்லைப்புறக் காவல் நிலையமாய்ச் சிறப்புற்றது என்றால், மேற்கு மாகாணத் தலைநகராகிய உச்சைனி, பெருவாணிக நிலையமாய்ப் பெருமையுற்றது. மேலைக் கடற்கரைக்கண் உள்ள பெரிய துறைமுகப் பட்டினங்களில் வந்து குவியும் வெளிநாட்டுப் பொருள்களின் வாணிக நிலையமாய் விளங்கியது அவ்வுச்சைனி நகரே. மேலும் சமயச் சிறப்பு வாய்ந்த ஏழு பேரூர்களுள் அதுவும் ஒன்று என்ற பெருமையும் அதற்கு இருந்தது. அதனால் வாணிக வளர்ச்சி குறித்தும், வழிபாட்டுப் பயன் கருதியும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மக்கள் திரள் திரளாக அந்நகர்க்கு வருவாராயினர். இவ்வாறு இரு வகையாலும் பெருமையுற்ற அவ்வூரின் ஆட்சிப் பொறுப்பையும் இளங்கோ அசோகனே ஏற்றல் வேண்டும் என்று விரும்பினான் பிந்துசாரன். அரசன் ஆணையை ஏற்று அசோகன், தக்ஷசீலம் விட்டு, உச்சைனி அடைந்து, அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

அசோகன் உச்சைனியில் வாழ்ந்திருந்தான். சில ஆண்டுகள் கழிந்தன. பிந்துசாரன் உடல்நலம் குன்றினான். அது கேட்டுத் தலைநகர்க்கு விரைந்து வந்து சேர்ந்தான் அசோகன். வந்த சின்னாட்களுக்கெல்லாம், மகத