பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


ஒருவனுக்குப் பதினாறு மனைவியர் இருத்தனர்; அவர்கள் வழியாக நூறறுவர்க்கும் மேற்பட்ட மக்கள் இருந்தனர் என்பன நம்பத் தக்கன ஆகா. அது மட்டுமன்று. அண்ணனும் தம்பியும், தங்கையும் தமக்கையுமாக உடன் பிறந்தார் பலர் சூழ அசோகன் அரசாண்டான்; அவர்கள் வாழ்க்கையை வளமாக்குவதில் அவன் ஆர்வம் காட்டியிருந்தான் என்ற வரலாற்றுச் செய்திகளும் உள்ளன. மேலும், அசோகனின் பாட்டனாகிய சந்திர குப்தன். இளமையில் வறுமையில் வாழ்ந்தான்; நாடு கடத்தப்பட்டு நலிவுற்றான்; அவ்வாறு அமைதியற்ற வாழ்வில் வாழ்ந்திருந்தவன், அரண்மனை வாழ்க்கையில் அடியிடத் தொடங்கியதும், தனககுக் கேடு செய்பவர் என்று ஐயுற்றவர்களையெல்லாம் கொன்று குவித்ததில் நேர்மை நின்றது; அவனைப் போல் அலலாமல், இரு தலைமுறைகளாக அமைதி நிலவும் நல்லாட்சி நடாத்தும் ஒரு குடியில் பிறந்து, தந்தையால் பலர் அறிய இளங்கோப் பட்டம் சூட்டப் பெற்ற அசோகனை, அவன் அரியணை அமருங் காலத்தில் தடை செய்வார் எவரும் இருந்திரார்; ஆகவே அவனுக்கு அத்தகைய அச்சம் உண்டாகக் காரணம் இல்லை. ஆகவே அவன் மீதும் குற்றத்தைச் சாட்டுவது குற்றமாம் என்று கூறி மகாவம்சம் கூறும் அச்செய்தியை மறுக்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள்.

தர்ம அசோகன் எனப் பிற்காலத்தில் பாராட்டப் பெற்ற அசோகன் இளமையில் ஆற்றவும் கொடியோனாய். வாழ்ந்து, அதன் காரணமாய் அதர்ம அசோகன் எனும் இழிபெயர் இட்டுப் பழிக்கப்பெற்றுளான் என்பதற்குச் சரித்திரச் சான்றுகள் உள. அசோகன் தன் இளமைப் பருவத்தில், குருதிப் பலி விரும்பும் துர்க்கையை வழி படும் சைவ சமய நெறி நின்று, உயிர்களைச் சிறிதும் தயங்காது கொன்று குவித்தான். அரண்மனையின் ஒரு வேளை விருந்திற்காக வேண்டி ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கிறான். புலால் தின்னும்,