இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை
கலிங்கம் கண்ட காவலர்-இருவர். வடகலிங்கத்தை வென்ற குலோத்துங்கனைப் பற்றியும், தென்கலிங்கம் வென்ற அசோகனைப் பற்றியும் இந்நூல் கூறுகின்றது. ஆராய்ச்சி முறையும், வரலாறு முறையும் தழுவ எழுதப்பட்டுள்ள இந்நூல் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை யுண்டாக்கும். பழங்கால வரலாற்று உண்மைகளில் பல இக்கால மக்கள் எழுச்சிக்கு எவ்வாறு துணைபுரிகின்றன என்பது இந்நூலைக் கற்பார்க்கு நன்கு விளங்கும். இத்தகைய சிறந்த நூலை எழுதியுதவிய புலவர்: கா. கோவிந்தன் எம். ஏ. அவர்களுக்கு எங்கள் நன்றியுரியது.
ந. பழநியப்பன்,
உரிமையாளர்,
வள்ளுவர் பண்ணை.