பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50



போர்க்களம் புகுந்தான்; அஃதறிந்த ஆகவமல்லன் தன் படைக்குத் தானே தலைவனாகிக் களம் புகுந்தான்,வெற்றி யாருக்கு வாய்க்கும் என்பதைத் துணிந்துகூறஇயலாத வகையில் போர் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாளுக்கியர்களின் தோல்விக்கெல்லாம் இராசாதிராசனே காரணமாம்; ஆகவே அவனைக் கொன்றாலல்லது தமக்கு வாழ்வில்லை எனச் சாளுக்கியப் படைத் தலைவர் அனைவரும் உணர்ந்திருந்தனர். ஆதலின், அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி வந்து இராசாதிராசனைச் சுற்றி வளைத்துக் கொண்டு ஒருமுகமாகப் போரிட்டனர். தனியொருவனாக நின்று போரிட்ட இராசாதிராசனால், படைத்தலைவர் பலரும் கூடித்தாக்கும் தாக்குதலைத் தாங்க இயலாது போயிற்று. அம்பேறுண்டு அவன் யானையும் இறந்தது; அதன் மீது அமர்ந்தவாறே அவனும் மாண்டான்.

வேந்தன் வீழ்ந்தான் எனக் கேட்டுச் சோழர் படை சிறிதே சோர்வுற்றது என்றாலும், உடன் வந்திருந்த இளவல். அந்நிலையே அக்களத்தில் அரசுரிமை தாங்கி, அஞ்சல் அஞ்சல்! எனக் கூறிவந்து அரும்போர் புரிந்து, சற்றுமுன் பெற்ற தோல்வியைப் பெறுவெற்றியாக மாற்றி விட்டான்.

கொப்பத்தில் சோழர் வெற்றியே பெற்றனர் என்றாலும், சோணாடு சிறந்த பேரரசன் ஒருவனை இழந்த பேரிழப்பிற்கு உள்ளாகிவிட்டது; சோணாட்டு மக்கள் சிந்தை நொந்து வருந்தினர்; ஆனால் சோணாட் டுப் புலவர்கள் ‘கல்யாணபுரமும், கொல்லாபுரமும் எறிந்து யானைமேல் துஞ்சின உடையார் விசயராசேந் திரன்’ என இராசா திராசன் புகழ்பாடி வாழ்த்தினார் கள். - -

இரண்டாம் இராசேந்திரன்: கங்கையும் கடாரமும் கொண் டோன். எனக் கொண்டாடப் பெறும் முதல் இராசேந்திர