பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52



சிறைசெய்தும், அந்நாட்டுத்தலைநகர் கொல்லாபுரத்தில் வெற்றித் தூண் நாட்டியும், விஜயாபிஷேகம் செய்து கொண்டும், சோணாட்டுத் தலைநகர்க்குச் செம்மாந்து திரும்பினான், இச்சோழர்குலக்குரிசில்.

ஈழநாட்டு மன்னர்கள், தங்கள் மண்ணுரிமையைப் பெறும் கருத்தோடு அவ்வப்போது செய்யும் கிளர்ச்சி, இரண்டாம் இராசேந்திரன் காலத்திலும் உரம் பெற்று உயிர்த்தெழுந்தது என்றாலும், இறுதியில் இருந்த இடம் தெரியாதவாறு அழிக்கப்பட்டு விட்டது; அதில் பங்கு கொணட ஈழ நாட்டு மன்னன் மானாபரணன் மக்கள் இருவரையும் சிறைசெய்தும், அப்போருக்குத் தலைமை தாங்கி முன்னின்ற வீரசலாமேகனைக் கொன்றும் வெற்றி கண்டான் இராசேந்திரன்.

பேராற்றங்கரைக் கொப்பத்தில் நடந்த போரில், இராசேந்திரனால் தோல்வியுண்டமையை எண்ணி எண்ணி வருந்திய ஆகவமல்லன், ஆங்குதான் பெற்ற பழியைத் தீர்த்துக்கொள்ளத் துணிந்து, மீண்டும் ஒரு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு வந்து, அந்நாட்டில் முடக்காறு என்னும் இடத்தில் பாடிக் கொண்டிருந்த இராசேந்திரனை எதிர்த்துப் போரிட்டான்; ஆனால் அந்தோ? அங்கும் அவன் தோல்வியே கண்டான்; வெற்றித் திருமகள் இம்முறையும் இராசேந்திரனுக்கே மாலை சூட்டினாள்.

இரண்டாம் இராசேந்திரனுக்கு ஆண்மக்கள் அறுவர்; பெண்மகள் ஒருத்தி. உத்தம சோழன் போலும் பட்டப் பெயர்கள் அளித்து, ஆண்மக்களைப் பெருமை செய்த இராசேந்திரன், பாண்டி மண்டலத்தை வென்று கைப் பற்றிய தன் குலத்தவரின் பெரும்புகழ், பாரெலாம் சென்று பரவும் வகையில், மகளுக்கு மதுராந்தகி எனப் பெயர் சூட்டிப் பெருமை செய்தான். தன் உடன் பிறந்தாள் அம்மங்கைதேவிக்குக் கீழைச் சாளுக்கிய இராச